
அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? (அல்குர்ஆன்-2:140)






![]()

![]()



அருள்மிகு ரமழான் மாதத்தின் சிறப்புக்களில் மிக முக்கியமானது அகிலத்தாருக்கு வழிகாட்டியான அருள்மறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்டதாகும். இது குறித்து திருமறைக்கு குர்ஆன் குறிப்பிடுகையில்,
‘இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.’ (அல்குர்ஆன் 02:185) என்று கூறுகின்றது.
உலகப் பொதுமறை இறக்கியருளப்பட்ட அருள்மிகு ரமழான் மாதத்தில் அல்குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காது? என்கின்ற அர்த்தமற்ற, அறிவுபூர்வமற்ற வரட்டுச் சித்தாங்களை தூக்கி வீசிவிட்டு சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்தறிவிக்ககூடிய, சிந்திக்கத் தூண்டக் கூடிய, இறையச்சமுடையோருக்கு நேர்வழிகாட்டக் கூடிய அதிஅற்புத வேதத்தை கற்று, அதன்படி செயற்பட்டு, அகிலத்தின் இரட்சகனின் அருளை அதிகமதிகம் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
இதோ அருள்மறை பேசுகின்றது.
‘அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?’ (அல்குர்ஆன் 47:24)
‘இது (அழ்ழாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பய பக்தி யுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.’ (அல்குர்ஆன் 02:02)
இறையச்சமே இலக்கு
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அழ்ழாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.’ (2:83)
மேலுள்ள அருள்மறை வசனம் ரமழான் மாத நோன்பு கட்டாயக் கடமை என்பதை உணர்த்துவதோடு, கடமையாக்கப்பட்டதற்கான காரணம் இறையச்சமே என்று எடுத்தியம்புகின்றது.
நோன்பு ஓர் கேடயம்
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“நோன்பு (பாவங்களிலிருந்து) காக்கின்ற கேடயம் ஆகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம். அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்.! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி! என்று இருமுறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அழ்ழாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்! (என்று அழ்ழாஹ் கூறுகிறான்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1894)
மேலுள்ள நபிமொழி ‘நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம்’ என்பதை மாத்திரமன்றி, ‘நோன்பாளியின் வாயிலிருந்து வருகின்ற வாடை கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்தது’ என்று கூறுவதன்
மூலம் நோன்பாளியின் சிறப்பினை உணர்த்தி நிற்கின்ற அதே வேளை, ‘நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அருளாளன் விஷேடமாகக் குறிப்பிடுவதன் மூலம் நோன்பின் மகத்துவத்தினை உணர்ந்நது கொள்ளலாம்.
ரய்யான் நோன்பாளிகளுக்கே!
திறக்கப்படும் சுவன வாசல்கள்
“ரமழான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன எனஅழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1898)
விலங்கிடப்படும் ஷைத்தான்கள்
“ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1899)
பாவங்களுக்குப் பிரியாவிடை
“யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அழ்ழாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1903)
மன்னிக்கப்படும் பாவங்கள்
“யார்
ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவர்
(அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2008)
மழைக்காற்றை விட அதிகமாக வாரிவழங்கும் வள்ளல்
“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள. வானவர் ஜிப்ரீல் (அலை) ரமழான் மாதத்தில் சந்திக்கும் வேளையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமதிகம் வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) ரமழானின் ஒவ்வோர் இரவும் – ரமழான் முடியும் வரை- அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மைச் சந்திக்கும் போது மழைக் காற்றை விட, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1902)
ரமழானை ஆரம்பிப்பது எவ்வாறு?
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைப்பிறையை தீர்மானிப்பதற்கு மூன்று வழிமுறைகளை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அவையாவன:
01.29ம் நாளை நிறைவு செய்த பின்னர், பிறையைக் கண்டு நோன்பு நோற்பது, பிறையைக் கண்டு நோன்பை விடுவது:
“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்!”(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)
02.பிறை கண்ட சாட்சியத்தின் அடிப்படையில், தகவலின் அடிப்படையில் நோன்பைத் தீர்மானிப்பது:
“இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்” (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116)
03. மாதத்தினை முப்பதாக பூர்த்தி செய்வது:
நமது பகுதியில் பிறை தென்படாதிருந்து, வெளியிலிருந்தும் பிறை காணப்பட்ட தகவல் வராத பட்சத்தில் மாத நாட்களின் எண்ணிக்கையை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!”(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)
இரவுத் தொழுகை நபிவழியும் புதுவழியும்
“நான் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரழி) அவர்களிடம், ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது, என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள், என்று விடையளித்தார்கள்.”(அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)
மேலுள்ள நபிமொழியை நாம் நடுநிலையோடு ஆய்வுக்குட்படுத்துகையில் நமக்கு ஒரு விடயம் நன்கு தெளிவாகின்றது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் ‘ரமழான் மாதத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்றே கேட்கப்படுகின்றது.
ஆனால், அன்னையவர்கள் ’ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.’ என்று மிக அழுத்தமாக ரமழான் அல்லாத காலங்களையும் குறிப்பிட்டு பதிலளிக்கின் றார்கள். மேலுள்ள நபிமொழியில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் கால இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்தாது, வழமையாக இரவுத்தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுது வந்தார்களோ, அதே பதினொரு ரக்அத்களையே ரமழானிலும் தொழுது வந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.
ஆனால், நமது சமுதாய மக்கள் தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்களும், வித்ர் என்ற பெயரில் 3 ரக்அத்களும், கியாமுல்லைல் என்ற பெயரில் 11 ரக்அத்களுமாக, 11 ரக்அத்களை மாத்திரம் கொண்ட ஒரே தொழுகையை 34 ரக்அத்களாக தொழுதுவருகின்றனர். இவ்வாறு தொழுவதன் மூலம் இரவுத் தொழுகையை அதிகப்படுத்திய குற்றத்திற்குள்ளாவதுடன்,
‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையாக்கி கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998) என்கின்ற நபிமொழியையும் மீறுகின்றனர். அழ்ழாஹ்வும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவுத் தொழுகை பதினொரு ரக்அத்கள் எனத் தீர்மானித்ததன் பின்னர் இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்துவது தொடர்பாக நபிமொழிகள் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன.
வெள்ளைக் கயிரும் கறுப்புக் கயிறும்
‘கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை, என்ற (2:187) இறைவசனம் அருளப்பெற்றபோது, நான் ஒரு கறுப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து என் தலையணையில் வைத்துக்கொண்டேன். இரவில் அதைப் பார்க்கலானேன். எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கறுப்புக் கயிறு என்பதன் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதன் கருத்து) விடியலின் வெண்மையும்தான்! என்று பதிலளித்தார்கள்’ (அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1916)
பரக்கத் மிக்க ஸஹர்
“நீங்கள் ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹர் செய்வதில் அருள்வளம் -பரக்கத்- இருக்கின்றது என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”(அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1923)
நிய்யத்தை வாயால் மொழியலாமா?
நிய்யத் என்ற சொல்லுக்கு உள்ளத்தால் நினைத்தல் என்பதுவே பொருளாகும்.
மாறாக, வாயால் மொழிதல் என்ற பொருள் கிடையாது. “நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்லி ரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹி தஆலா’ இந்த வருடம் ரமலான் மாதத்தின் பர்ழான நோன்பை அதாவாக நாளை நோற்பதற்கு நிய்யத்து செய்கிறேன் அல்லாஹ்வுக்காக”
குறித்த செய்தியை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்வில் ஒரு முறை கூட ஓதியதாக எந்த ஆதாரமும் கிடையாது. மாறாக, குறி
நோன்பை முறிக்கும் செயல்கள்
மூக்குத் துவாரத்தால் நீரை உட்செலுத்தல்:
‘நோன்பாளி வுழூச்
செய்யும் போது, மூக்குக்கு அளவுகடந்து தண்ணீர் செலுத்தலாகாது என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: லகீத் பின் ஸபீரா (ஸல்), நூல்:
அபூதாவூத்.
வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்:
‘எவருக்கு வாந்தி
வந்ததோ, அவர் மீது நோன்பு கழா|இல்லை. யார் வேண்டுமென்று வாந்தி எடுத்தாரோ,
அவர் நோன்பைக் கழாச் செய்யட்டும்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரழி), நூல்: திர்மிதி, அபூதாவூத்.
சிற்றின்பத்தின் மூலம் விந்து வெளிப்படல்:
ஒருவர் கட்டியணைத்தல்,
முத்தமிடல் போன்ற சிற்றின்பத்தில் ஈடுபடுகின்றார். அதன் மூலம் விந்து
வெளிப்படும் எனில், அவரது நோன்பு முறிந்து விடுவதோடு, அவர் அதனை பின்னர்
கழாச் செய்ய வேண்டும்.
